என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
முதியவர் மாடு முட்டி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே மாடு முட்டி முதியவர் இறந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 60).
இந்த நிலையில் நேற்று இவர் கந்திகுப்பம் பகுதியில் நடந்த மாட்டுச்சந்தைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு நின்ற ஒரு மாடு, திடீரென சின்னதம்பியை முட்டி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதம்பி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






