என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் ரமணா பள்ளி &அருணை நகர் இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.45 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆடையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9.07 லட்சம்மதிப்பீட்டில் நடைபெறும் உறிஞ்சிக்குட்டை அமைக்கும் பணியினையையும் மற்றும் மேலதிக்கான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற நூலக கட்டிடம் மறு சீரமைப்பு பணியினையும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சிக்குழி அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து உடையானந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் பா.முருகேஷ் மரக்கன்று நட்டார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story






