என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளுக்கு வலை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சக்திநகர் வடக்கு விரிவாக்கப்பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சித்ராதேவி (வயது 52). இவர் மேலத்தோப்பு அரசு ஆரம்பபள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர், வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் தனது பைக்கில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். லெட்சுமி குமரப்பா நகர் வந்த போது,
பின்னால் பைக்கில் வந்த 2 பேர் சித்ராதேவி கழுத்தில் அணிந்திருந்த 3பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து சித்ராதேவி கொடுத்த புகாரின்பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






