என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிறு வகைகளை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு செய்தார்.
அதிகம் லாபம் தரும் நெல் தரிசில் பயறு வகைகள்
நெல் அறுவடை முடிந்த பின் அடுத்த பயிராக உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு சாகுபடி செய்யலாம் என மேலாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
நெல் அறுவடை முடிந்த பின் அடுத்த பயிராக உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு சாகுபடி செய்யலாம் என மேலாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஈரோடு மாவட்டம் மாரப்பம்பாளையம் கிராமத்தில் மயில்சாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் தரிசு நிலத்தில் உளுந்து வம்பன் 8 என்ற ரகம் 1 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த விவசாயிக்கு விதை கிராமத் திட்டத்தின் கீழ் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த வயதுடைய பயறு வகை சாகுபடி செய்வதால் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயறுவகை சாகுபடியை முனைப்போடு செய்ய வேளாண்மைத்துறை அனைத்து தொழில்நுட்ப மேலாண்மை விவரங் களையும் விவசாய மக்களுக்கு தெரிவிப்பதுடன், அவர்களை ஊக்கப்படுத்தவும் மாவட் டத்திலுள்ள அனைத்து களப்பணி யாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கீழ்பவானி பாசனத் திட்டத்தில் 2-ம் போக சாகுபடியில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்பொழுது அறுவடை பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டத்தின் சராசரி மழை அளவு 702.4 மி.மீ கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை மூலம் இயல்பான மழை அளவைவிட கூடுதலாக 284.9 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.இதன் மூலம் மாவட்டத்தின் பெரும்பான்மையான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர் நிலைகளில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது.
இதனை பயன்படுத்தி தற்போது நெல் அறுவடை முடிந்த பின் அடுத்த பயிராக உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்பயறு சாகுபடி செய்ய 3700 ஹெக்டர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வட்டாரங்க ளிலும் வேளாண்மைத்துறை பல்கலைக்கழக விஞ்ஞனிகள், மகளிர் திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவற்றுடன் இணைத்து அனைத்து கிராம ஊராட்சி ஒன்றியங்களிலும் பயறுவகை சாகுபடி செய்திட விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பயறுவகை சாகுபடிக்கு மிக குறைந்த நீரே போதுமானது. ஏக்கருக்கு 300-400 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. பயறு வகை சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் செறிவூட்டப்படுவதோடு, கால்நடைகளுக்கு தீவனமாகவும் இச்செடிகள் பயன்படுகிறது.
பயறுவகை சாகுபடிக்கு தேவையான உயர் விளைச்சல் ரகங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் வேளாண்மைத்துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






