என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டி.
மணல் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது
கறம்பக்குடி அருகே மணல் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்&இன்ஸ்பெக்டர் பழனிகுமார் மற்றும் போலீசார் புதுப்பட்டி, பல்லவராயன் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி சென்ற 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் அந்த பகுதியில் உள்ள காட்டாற்றில் இருந்து மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தங்கராசு வயது 55, லட்சுமணன் 55 உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இதேபோல் ரெகுநாதபுரம் சப்&இன்ஸ்பெக்டர் செல்வ குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது செங்கமேடு பகுதியில் அனுமதியின்றிமணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
Next Story






