என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாநகராட்சியில் 3 சுயேட்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு

    வேலூர் மாநகராட்சியில் 3 சுயேட்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் தேர்தலில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது அந்த கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த நிலையில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
     6-வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சீனிவாசன் தி.மு.க.வில் இணைந்தார்.

    இதேபோல 19-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் மாலதி 48-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை கவுன்சிலர் கோகிலா ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

    இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×