என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உக்ரைனில் தவிப்பவர்களின் விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் - கலெக்டர் அம்ரித் தகவல்
Byமாலை மலர்2 March 2022 11:30 AM GMT (Updated: 2 March 2022 11:30 AM GMT)
உக்ரைனில் கல்வி கற்று வரும் 13 மாணவர்களின் விவரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளது.
ஊட்டி:
ரஷியா- உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் கல்வி கற்று வரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், அங்கு குடியேறி வசித்து வருபவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உக்ரைனில் கல்வி கற்று வரும் 13 மாணவர்களின் விவரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளது. அதற்கு ஏதுவாக மாணவர்கள், குடியேறியவர்கள் பெயர், பாஸ்போர்ட் எண், உக்ரைனில் வசித்து வரும் இருப்பிடம், கல்லூரி முகவரி, அங்கு உபயோகித்து வரும் செல்போன் எண், பணியில் இருப்பின் அதன் விவரம், தமிழகத்தில் வசிப்பிட முகவரி, இங்கு உள்ள செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, உறவினரின் முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். அத்துடன் 0423-2444013 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X