search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா சிவராத்திரி விழாவில் சாமிக்கு அலங்காரம் செய்து வைத்த போது எடுத்த படம்.
    X
    மகா சிவராத்திரி விழாவில் சாமிக்கு அலங்காரம் செய்து வைத்த போது எடுத்த படம்.

    அபிதகுஜலாம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

    அல்லியாளமங்கலம் கிராமத்தில் அபிதகுஜலாம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் 200&ம் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் உள்ள அபிதகுஜலாம்பாள் உடனுறை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 24 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது.

    மாலையில் அபித குஜலாம்பாள் தாயாருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பின்னர் அருணாச்சலேஸ்வரர் சிவலிங்கத்திற்கு பால் தயிர் சந்தனம் குங்குமம் இளநீர் கரும்புச்சாறு ஆகியவை மூலம் பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து லட்சார்ச்சனை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுபின்னர்.

    அபிதகுஜலாம்பாள் உடனுறை அருணாச்சலேஸ்வரர் ஆகிய உற்சவ சாமிகளுக்கு வெட்டிவேர் மாலை அணிவித்து பல்வேறு வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்து மேளதாளம் முழங்க பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடியபடிமாடவீதி வழியாக கிராமத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சாமி வீதி உலா வந்தது.

    அப்போது பக்தர்கள் ஆர்வமுடன் வீட்டின் முன்பு கற்பூர தீபம் காண்பித்து வணங்கினார்கள் முன்னதாக சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×