என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரியில் சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நடந்த தவக்காலத்திற்கான சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகின்ற தவக்காலத்தின் துவக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருபலி பூஜையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக்கொண்டு தவநாட்களை அனுஷ்டிக்க துவங்குகிறார்கள்.
அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடந்தது. இந்த சிறப்பு திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருட்திரு.இசையாஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார்.
இதில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டு தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக் கொண்டு, தங்களுடைய தவமுயற்சிகளை துவங் கினார்கள். தவக்காலத்தை அனுஷ்டிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருட்களை தவிர்த்து சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவநாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
இதே போல் சுண்டம்பட்டி, எலத்தகிரி, புஷ்பகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ அலயங்களில் தவக்கால சாம்புல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடந்தது.
Next Story






