search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய ஆம்புலன்ஸ்

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங் களை மாவட்டகலெக்டர் டாக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறிய தாவது:

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் இதுவரை மக்கள் சேவைக்காக 2 பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை வாகனம், 3 வெண்டிலேட்டர், டிபிரிலேட்டர் (மேம்படுத் தப்பட்ட அவசர சிகிச்சை உயிர் காக்கும் கருவிகள்) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட வாகனம் மற்றும் 1 இருசக்கர வாகனம் உள்ளிட்ட 108 ஆம்புலன்ஸ்  வாகனங்கள் 30 இயக்கப்பட்டு வருகிறது. மேலும், நேற்று புதியதாக வரப்பெற்ற 5 வாகனங்கள் என மொத்தம் 35 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுமக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும்.

    புதியதாக வரப்பெற்ற 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, ஆலப்பட்டி, பாகலூர் மற்றும் கெலமங்கலம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களின் சேவைக்காக இயக்கப்பட உள்ளது. 

    இனிவரும் காலங்களில் விபத்து, தாய்சேய் நலம் மற்றும் அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் தங்குதடையின்றி முழுமையாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (நலப்பணிகள்)  பரமசிவன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)  கோவிந்தன், 108 வாகன ஒருங்கிணைப்பாளர்கள் ராமன்கனி,  டைட்டஸ்,  வினோத் மற்றும் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×