search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு
    X
    அமைச்சர் சேகர்பாபு

    தமிழகம் முழுவதும் கோவில்களில் ரூ.120 கோடி வாடகை வசூல்- அமைச்சர் தகவல்

    கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கையால் 01.07.2021 முதல் நாளது தேதி வரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.4.28 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.3.23 கோடியும், சென்னை, பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.2.05 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.1.79 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் ரூ.1.43 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ரூ.1.39 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலில் ரூ.1.26 கோடியும், திருவாரூர், திருத்துறைப்பூண்டி பிறவிமருந் தீஸ்வரர் கோவிலில் ரூ.1.24 கோடியும், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ரூ.1.16 கோடியும், காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் ரூ.1.15 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் 90 சதவீத மாணவர்கள் இந்தியாவில் தகுதிபெற தவறுகிறார்கள்: மத்திய அமைச்சர்

    Next Story
    ×