என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்குப்பதிவு
கணவன்-மனைவி மீது வழக்கு
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் சோதனை நடத்தி வெடிபொருட்கள் பறிமுதல் செய்து கணவன் மனைவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி புஷ்பம். இவர்கள் வீட்டில் பட்டாசு தொழில் செய்து வந்தனர்.
இந்தநிலையில் உரிமம்பெறாத வெடிபொருட்கள் அங்கு இருப்பதாக சங்கரகோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் சோதனை நடத்தி ரூ.60ஆயிரம் மதிப்பிலான வெடிபொருட்களை பறிமுதல் செய்து கணவன் மனைவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் வெம்பக்கோட்டை போலீசார் சோதனையில் கோட்டையூரை சோர்ந்த கண்ணன், செல்வமோகன் ஆகியோர் தலா 5 கிலோ வெடிபொருட்கள் பதுக்கியதாக கைது செய்யப்பட்டனர். குமார் என்பவரிடம் இருந்து 7கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரும் கைது செய்யப்பட்டார்.
Next Story






