என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
குடியாத்தம் அருகே ஆட்டோவில் சாராயம் கடத்தியவர் கைது
குடியாத்தம் அருகே ஆட்டோவில் வெல்லம் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம், பூங்குளம், ஏரிப்பட்டரை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஏரிப்பட்டரை கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது 60 லிட்டர் கள்ளச்சாராயமும், சாராயம் காய்ச்சுவதற்காக 100 கிலோ வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
Next Story






