search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயான கொள்ளை விழா
    X
    மயான கொள்ளை விழா

    வேலூரில் மயான கொள்ளை விழாவில் அன்னதானம், இசைக் கச்சேரிக்கு தடை

    வேலூரில் மயான கொள்ளை விழாவில் அன்னதானம், இசைக் கச்சேரிக்கு தடை விதித்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மயானக் கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

    அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழாவில் செல்ல உள்ள தேரின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2-ம் தேதி வரை உள்ளதால் இசைக்கச்சேரி நடத்தவும் அன்னதானங்கள் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் அனுமதி அளித்த இடங்களில் பிற மதத்தினர் வழிபாட்டு தலங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பகல் 12 மணிக்கு முன்பாக தொடங்கி இரவு 7 மணிக்குள் முடிக்க வேண்டும். மயானக்கொள்ளை திருவிழாவில் பட்டாசு, வெடிபொருட்கள் எதுவும் வெடிக்கக்கூடாது.

    விழா முடிந்த 24 மணி நேரத்துக்குள் சிலைகள் வைக்கப்பட்ட இடத்தில் குவிக்கப் பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். மயானக்கொள்ளை திருவிழாவை வருவாய் கோட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    காட்பாடி-வேலூர் புதிய பாலம் வழியாக ஊர்வலம் செல்லும் என்பதால் நாளை பழைய பாலத்தின் வழியாகவே இருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    விழா நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி வைக்கவேண்டும். வேலூர் பாலாற்றங்கரை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் முதலுதவி சிகிச்சை குழுக்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

    விழா நடைபெறும் பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு மற்றும் மீண்டும் மின் இணைப்பு வழங்கும் பணியை முறையாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×