என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை பெரிய நாயகி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம்
திருவண்ணாமலை பெரிய நாயகி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம்
திருவண்ணாமலையில் சிவராத்திரியை முன்னிட்டு பெரிய நாயகி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:
மகாசிவராத் திரியையொட்டி திருவண்ணாமலை 10-வது புது வாணியன் குளத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத பெரியாண்டவர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் இன்று இரவு நடைபெறுகிறது.
முன்னதாக இன்று காலை கோவில் கருவறையில் உள்ள அம்மன் மீது சூரிய ஒளி பரவும் அதிசய நிகழ்வு நடந்தது.
இதனை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு மகிழ்ந்தனர். மேலும் இதையொட்டி நடைபெற்ற பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று 6 கால பூஜைகளும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Next Story






