என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பர்கூர் அருகே குடும்ப தகராறில் மனைவி தற்கொலை

    கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மனைவி அனிதா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள்  ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்& மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த அனிதா, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×