என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தைக்கு எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொட்டு மருந்து வழங்கினார்.
சீர்காழியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
சீர்காழியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் அரசு மருத்துவமனை, பேருந்துநிலையம், நகராட்சி வளாகம் ஆகிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரசு மருத்துவர் மருதவாணன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
எம்.பன்னீர்செல்வம் எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்து குழந்தைக்கு சொட்டுமருந்து வழங்கினார்.சீர்காழி நகர ஆரம்ப சுகாதாரநிலையத்தில் டெம்பிள்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆறுமுகம், துணை ஆளுனர் வைத்தியநாதன், செயலாளர் குமார் ஆகியோர் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கிவைத்தனர்.
சீர்காழி நகராட்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரதாப்குமார் குழந்தைக்கு சொட்டுமருத்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதேபோல் வைத்தீஸ்வரன் கோயில், திருமுல்லைவாசல், திருவெண்காடு, பூம்புகார், பழையார், கொள்ளிடம் உட்பட சீர்காழி வட்டம் முழுவதும் 110 மையங்கள், 2 நடமாடும் வாகனங்கள் மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் வடநாட்டினர் சிலர் தங்கி விவசாய உபகரணங்களான மண்வெட்டி, அரிவாள், கோடாரி உள்ளிட்ட இரும்பு பொருட்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் சாலையோரம் தற்காலிக குடில்கள் அமைத்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடமாடும் போலியோ சொட்டு மருந்து வாகனத்துடன் சாலையோரம் அமைக் கப்பட்ட வடநாட்டினர் குடில் பகுதியில் முகாமிட்டு அனைத்து குழைந்தைகளுக்கும் சொட்டு மருந்து செலுத்தினர்.மேலும் முகாமில் சொட்டு மருந்து போடாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள், செவ்வாய்கிழமைகளில் இல்லம் தேடி சென்று சொட் டுமருந்து குழந்தைகளுக்கு இட உள்ளனர்.
Next Story






