என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு செய்த போது எடுத்த படம்
குடியாத்தத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு
குடியாத்தத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வேலூர் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்பாரத், தன்னார்வலர்கள் முத்துராஜ், தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மழை நீர் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்குவது, நாடகம் உள்ளிட்டவை நடத்திக் காண்பிக்கப்பட்டது.பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






