என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காட்பாடியில் வாகனம் மோதி தொழிலாளி பலி

    காட்பாடியில் வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    காட்பாடி குமரப்பா நகரை சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 55). கூலித்தொழிலாளி.  இவர் நேற்று இரவு காட்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்றார்.அப்போது ஆந்திரா நோக்கி வேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    தூக்கி வீசப்பட்ட பெஞ்சமின் படுகாயம் அடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    காட்பாடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காட்பாடி போலீஸ் நிலையம் அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

    விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×