என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தல்
அனுமதியின்றி பதுக்கிய மணல் பறிமுதல்
காரியாபட்டி அருகே அனுமதியின்றி பதுக்கிய மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் பகுதியில் குண்டாறு அருகே உள்ள தனியார் இடத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து தாசில்தார் தனக்குமார் உத்தரவின் அடிப்படையில் மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வடக்கு புளியம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரத்தினம், தலையாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் தண்டியனேந்தல் பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது தண்டியனேந்தல் கிராமம் அருகே அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 20 யூனிட் மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர்.
Next Story






