என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
ஊத்தங்கரை அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரபட்டு பகுதியில் மணல் கடத்துவதாக ஊத்தங்கரை போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சப்& இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீஸார் காரப்பட்டு மற்றும் பாம்பாறு ஆற்று படுக்கை அருகே ரோந்து சென்று சோதனை செய்ததில் டிராக்டரில் மூட்டை கட்டி மணல் கடத்துவது தெரிய வந்தது.
மணல் கடத்தி கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் காரப்பட்டு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 39) என தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய செல்வத்தை கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






