என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய 108ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.
    X
    புதிய 108ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.

    ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை

    திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கம்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு வழங்கப்பட்ட புதிய 108ஆம்புலன்ஸ் சேவையை எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள் அவசரகால சிகிச்சைபெறுவதற்காக அவசரகால ஊர்தியான 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. 

    அண்மையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அனைத்துவசதிகளும் அடங்கிய நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. 

    அதில் ஒன்றாக திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு புதிதாக 108ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.

    புதிய ஆம்புலன்ஸ் முறையாக திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒப்படைத்து அதன் சேவை தொடங்கும் விழா கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. 

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அங்குதன், மாலினி, மஞ்சரிதேவி, திமுக ஒன்றிய செயலாளர் மலர்விழி, பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், மீனவரணி துணை அமைப்பாளர் செல்லப்பன், திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள், சேவிலியர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×