என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் அரசு ஆஸ்பத்திரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் 1.30 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
வேலூர் மாவட்டத்தில் 1.30 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரத்து 345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை வேலூர் அரசு பெண்ட் லேன்ட் ஆஸ்பத்திரியில் தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து போடுவதற்காகவேலூர் மாவட்டத்தில் 934 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு கூடுதலாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபார நிமித்தமாக வேலூர் மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.
மேம்பால பணியாளர்கள், சாலை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க பட்டு வருகிறது.
இப்பணியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட 3,548 பணியாளர்களும் மேற்பார்வையிட 116 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
முகாம்களுக்கு தேவையான சொட்டு மருந்துகள் எடுத்துச் செல்லவும் வேலூர் மாவட்டம் முழுவதும் பிற துறை மற்றும் சுகாதாரத் துறை வாகனங்கள் உட்பட 56 வாகனங்கள் பயன்படுத்தப்பட் டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே வழக்கமாக போடும் போலியோ சொட்டு மருந்து எத்தனை முறை போட்டிருந்தாலும் இம்முறையும் அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Next Story






