search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    முகப்பருவை காரணம் காட்டி தொல்லை: மனைவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய சாப்ட்வேர் என்ஜினீயர் கைது

    என்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டி தாக்கிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    கோவை:

    கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயது பெண். இவர் தனியார் வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    எனக்கும், கோவை காந்திபுரம் முதலாவது எக்ஸ்டென்சன் வீதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான பிச்சைமுத்து(32) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது எனது பெற்றோர், மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனமாக 51 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் கொடுத்தனர்.

    திருணமான சில மாதங்களில் எனது முகத்தில் முகப்பரு வந்தது. இதனை பார்த்த எனது கணவர் என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    மேலும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் உனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தனது பெயரில் சொந்த வீடு ஒன்றை வாங்கி தருமாறு கேட்டு டார்ச்சர் செய்து வந்தார்.

    இதற்கு எனது கணவரின் தந்தை செல்லதுரை, தாயார் ஜெயலட்சுமி, சகோதரி மகேஸ்வரி, சகோதரர் முத்துக்குமார் ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் எனது கணவர், அவரது செல்போனில் உள்ள எனது நிர்வாண படத்தை காட்டி தாக்கி மிரட்டினார். இதில் காயமடைந்த நான் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

    எனவே என்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டி தாக்கிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    அவரது புகாரின் பேரில் மத்திய அனைத்து மகளிர் போலீசார் பிச்சை முத்து, அவரது தந்தை செல்லதுரை, தாய் ஜெயலட்சுமி, சகோதரி மகேஸ்வரி, சகோதரர் முத்துக்குமார் ஆகிய 4 பேர் மீதும் தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிச்சைமுத்துவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×