என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மோட்டார் சைக்கிள் தொலைந்த வேதனையில் காண்டிராக்டர் தற்கொலை

    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் தொலைந்த வேதனையில் காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). தனியார் சர்க்கரை ஆலையில் காண்டிராக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணனின் மோட்டார் சைக்கிள் திடீரென்று தொலைந்துவிட்டது. பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனால் சரவணன் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×