என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேதாஜி மைதானத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா உடற்பயிற்சி வகுப்பு நடத்தினார்.
திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் -வேலூர் டி.ஐ.ஜி. அறிவுரை
திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுரை வழங்கினார்.
வேலூர்:
வேலூர் நேதாஜி மைதானத்தில் போலீசாருக்கான உடற் பயிற்சி முகாம் இன்று நடந்தது. டி.ஐ.ஜி. ஆனி விஜயா கலந்துகொண்டு போலீசாருக்கான உடற்பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்.முதலில் நீங்கள் உங்களை ரசிக்க வேண்டும்.
இல்லாவிட்டாலும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
குடும்பம், வேலை, உலகத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்வில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும்.உங்கள் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். அந்த திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை புரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் உடற்பயிற்சி பெற்றனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் போலீசாருக்கு உடற் பயிற்சி முகாம் நடத்த டி.ஐ.ஜி.உத்தரவிட்டார்.
Next Story






