என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஐ.டி.ஐ. மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
செய்யாறு அருகே ஐ.டி.ஐ. மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள தென்னம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்யாறில் ஐடிஐ படித்து வருகிறார்.
கடந்த 24-ம் தேதி ஐ.டி.ஐ.க்கு சென்று விட்டு செய்யாறில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு மாணவர் வந்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் 2 பேர் முன்பகை காரணமாக மாணவரை பஸ்சிலிருந்து இறக்கி அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவருடன் வந்த அவரது நண்பர்கள் தடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து வாலிபர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






