என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து உக்ரைனில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து உக்ரைனில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யா ராணுவம் கடந்த 24-ந்தேதி அதிகாலை உக்ரைன் நாட்டுக்குள் ராணுவ நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 5000 மாணவர்கள் பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் பொருட்டு அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது).கணேஷ் மற்றும் புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் ஆகியோர் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு அருகில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் விபரத்தை தெரிவிக்குமாறு திருவண்ணாமலை கலெக்டர்.பா.முருகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.
தொடர்பு அலுவலர்களின் எண்கள்
சே.கணேஷ்,
94450 08158,
அலுவலர், மாவட்ட கலெக்டர் நேர்முகஉதவியாளர் (பொது), திருவண்ணாமலை
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசிஎண் 1070, ஜெரிந்தா லாசரஸ், ஆணையர், ஆயகைத் தமிழர் நாவன் மற்றும் மறுவாழ்வு
94458 69848
96000 23645
99402 56444
044-28515288
வாட்ஸ்அப் எண்
உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாட்டு பொறிகை இல்லம் 92895 16716
புதுதில்லி; மின்னஞ்சல்ukrainetamils@gmail.com
Next Story






