search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன்
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1-ந் தேதி மகா சிவராத்திரி விழா

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது.
    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. 

    அதன் பிறகு மகா சிவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது.
    பின்னர் 12-30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் அதிகாலை 1மணிக்கு 3-ம் கால பூஜையும் 1-30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது. 

    ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 

    அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் மறுநாள்அதிகாலை 4:30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் உள்ள பூஜைகள் நடக்கிறது மகாசிவராத்திரியையொட்டி ஒவ்வொரு கால பூஜையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×