என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனந்தன் ஆற்றில் இருந்து தண்ணீர் விடாததால் அத்திக்கடை சானல் பகுதி விவசாயிகள் பாதிப்பு
Byமாலை மலர்26 Feb 2022 7:39 AM GMT (Updated: 26 Feb 2022 7:39 AM GMT)
அனந்தன் ஆற்றில் இருந்து தண்ணீர் விடாததால் அத்திக்கடை சானல் பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
அனந்தன் ஆற்றின் கிளை சானலான அத்திக்கடை சானல் கடைவரம்பு பகுதியாகும். இப்பகுதியில் கடந்த ஒன்றரை மாத காலமாக தண்ணீர் விடவில்லை. இதனால் திக்கிலான்விளை மங்காவிளை, நங்கூரம் பிலாவிளை, கேசவன்புதூர், மேலகிருஷ்ணன்புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அணையில் போதிய தண்ணீர் இருந்தும் இந்த கடைவரம்பு சானலில் தண்ணீர் விடவில்லை இதனால் தென்னை விவசாயிகள் தங்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் பாசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் நிலத்தடி நீரும் வேகமாக கீழே செல்கிறது.
இதுகுறித்து நீர் வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் இதுவரை தண்ணீர் விடவில்லை. அணையில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் விடாதால் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். எனவே உடனடியாக அத்திக்கடை சானலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என மாவட்ட கலெக்டரை அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X