search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அனந்தன் ஆற்றில் இருந்து தண்ணீர் விடாததால் அத்திக்கடை சானல் பகுதி விவசாயிகள் பாதிப்பு

    அனந்தன் ஆற்றில் இருந்து தண்ணீர் விடாததால் அத்திக்கடை சானல் பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கன்னியாகுமரி:

    அனந்தன் ஆற்றின் கிளை சானலான அத்திக்கடை சானல் கடைவரம்பு பகுதியாகும். இப்பகுதியில் கடந்த ஒன்றரை மாத காலமாக தண்ணீர் விடவில்லை. இதனால் திக்கிலான்விளை மங்காவிளை, நங்கூரம் பிலாவிளை, கேசவன்புதூர், மேலகிருஷ்ணன்புதூர்  ஆகிய பகுதிகளில்  விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    அணையில் போதிய தண்ணீர் இருந்தும் இந்த கடைவரம்பு சானலில் தண்ணீர் விடவில்லை இதனால் தென்னை விவசாயிகள் தங்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் பாசனம் செய்ய முடியாமல்  தவித்து வருகின்றனர். மேலும் நிலத்தடி நீரும் வேகமாக கீழே செல்கிறது.

     இதுகுறித்து நீர் வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் இதுவரை தண்ணீர் விடவில்லை. அணையில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் விடாதால் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். எனவே உடனடியாக அத்திக்கடை சானலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என மாவட்ட கலெக்டரை அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனர்.
    Next Story
    ×