என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா

    பூரணாங்குப்பத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. 

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயானக் கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மயானகொள்ளை திருவிழா  வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    8-ந் தேதி நள்ளிரவு 12 மணியளவில் ரணகளிப்பும் அதனை தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை தேரோட்டம் 9-ந் தேதி மாலை  5.30 மணிக்கு நடக்கிறது. 

    இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள் தேரோட்டத்தினை வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர். 

    விழாவின் நிறைவாக 10-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்த லிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் கிராம பொதுமக்களும் இளைஞர்களும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×