என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்குப்பதிவு
குழந்தைகள் ஆபாச படம் வெளியிட்ட வாலிபர்
விருதுநகரில் குழந்தைகளின் ஆபாச படத்தை தனது செல்போனில் வெளியிட்ட வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஆபாச வீடியோ குற்றங்களை தடுக்கும் வகையில் வன்கொடுமை பாலியல் தடுப்புபிரிவு போலீசார் செல்போன் மற்றும் இணையங்களை கண்காணித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் சாலைத்தெருவைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் தனது மொபைலில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை ஆயிரம்விளக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை பாலியல் தடுப்புபிரிவு அலுவலகத்தில் இருந்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் தரப்பட்டது.
அதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சப்இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் விசாரணை நடத்தி மாயக்கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Next Story






