என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
புதுப்பெண் திடீர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் திருமல்லப்பா. இவரது மனைவி பூமிகா (வயது19). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பூமிகா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த பூமிகா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டில் இளம்பெண் இறந்துள்ளதால் இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






