என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கூட்டுறவு வங்கி தலைவர் பதவியில் இருந்து அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் பதவியில் இருந்து அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் செய்யப்பட்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாரண்டப் பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பஜ்ஜேப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர் மாதேசப்பா என்பவர் தலைவ ராகவும், துணைத்தலைவராக புஷ்பம்மா என்பவரும் 9 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலை யில் சங்கத் தலைவர் சங்க நடவடிக்கைக்கு விரோதமாக செயல்படுவதாகவும் , உறுப்பினர்களுக்கு வேளாண்மை கடன் வழங்காமலும் சங்க பணிகளில் தொய்வு இருப்பதாகவும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு நிர்வாக குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 22ந் தேதி சங்க கூட்டம் கூட்டி துணைத் தலைவர் உள்பட 8 நிர்வாக குழு உறுப்பினர்களும் மாதே சப்பா மீது நம்பிக்கையில்லா  தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்பேரில் சங்கத் தலைவர் மாதேசப்பாவை தகுதி நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் துணைத் தலைவர் புஷ்பம்மா பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×