என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து முன்னணியினர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் இன்று மனு அளித்த காட்சி.
    X
    இந்து முன்னணியினர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் இன்று மனு அளித்த காட்சி.

    வேலூரில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வழிபாட்டு தலமாக மாற்ற முயற்சி

    வேலூரில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வழிபாட்டு தலமாக மாற்ற முயற்சி நடப்பதாக மாநகராட்சி கமிஷனரிடம் இந்து முன்னணி மனு அளித்தனர்.
    வேலூர்

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் மகேஷ் தலைமையில் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது;

    வேலூர் மெயின் பஜார், சர்க்கார் மண்டி தெருவில் குடியிருப்பு கட்டிடம் இருந்தது. அதை உரிய அனுமதியின்றி இடித்து அப்புறப்படுத்தி விட்டு, வேலூர் மாநகராட்சி அனுமதியின்றி கட்டிடம் கட்டி பள்ளிவாசலாக முயற்சி செய்கிறார்கள். 

    இந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதி முழுவதும் இந்துக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மற்றும் வியாபார பகுதியாகவும் உள்ளது.

    இந்த பிரச்சனைக்குரிய கட்டிடத்திற்கு பின்புறம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இடது புறம் சுமார் 10 மீட்டர் தொலைவில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    வலதுபுறம் சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதற்கு கிழக்கு பக்கம் 100 மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் உள்ளது.
    இந்த கோவில்களில் திருவிழா மற்றும் உற்சவ காலங்களில் மற்றும் பண்டிகைகள் நடைபெறுகின்ற இடத்தில் இந்த பிரச்சனைக்குரிய இடம் அமைந்துள்ளது. சர்க்கார் மண்டி தெரு வழியாகதான் சாமி ஊர்வலமும், ரத ஊர்வலமும், பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு இந்துக்கள் வசிக்கும் பகுதிகளால் சூழப்பட்டு இந்து கோவில்களின் மிக அருகாமையில் சாமி ஊர்வலம் நடைபெறும் தெருவிலும், எவ்வித அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டிடம் எழுப்பி பள்ளிவாசலாக மாற்ற முயற்சிப்பது பொது அமைதிக்கும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையும், மத மோதல்கள்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும்.

    எனவே பிரச்சனைக் குரிய சட்ட விரோத கட்டிடத்தை அகற்றியும், அங்கு வழிபாடுகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
    Next Story
    ×