என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் நடந்தது.
    X
    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் நடந்தது.

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. 

    நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சிவனின் மூன்று கண்களில் இருந்து மூன்று பொருட்கள் தோன்றி விழுந்து சந்திரன், சூரியன் மற்றும் அக்னி பெயரால் இந்த கோவிலில் மூன்று குளங்கள் விளங்குகின்றன. சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம் அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    சிதம்பரத்திற்கு முற்பட்ட கோவிலாக விளங்குவதால் இதனை ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கின்றனர். இங்கு நடராஜர் சபையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பித்ரு லோக தலைவனான ருத்ரனின் பாதம் சந்திர தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது. இதில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் 27 தலைமுறைகள் செய்த பாவம் விலகுவதாக ஐதீகம். 

    இதற்கெல்லாம் மேலாக ராமாயணத்தில் இந்த கோவிலைப்பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவில் வைரமுத்து சுவாமி வழிபாடு தேர்த்திருவிழா உள்ளிட்ட விழாக்கள் நடந்துகொண்டிருந்தன தொடர்ந்து நேற்று இரவு தெப்போற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக முன்னதாக சந்திரசேகர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சந்திரசேகர சுவாமி எழுந்தருளி மகா தீபாராதனை காட்டப்பட்டது அதன்பின்னர் அக்னி தீர்த்த குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தற்போது கண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
    Next Story
    ×