என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நீலகிரியில் 777 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

    மாவட்டம் முழுவதும் 777 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 40,890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    நீலகிரி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள்  27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது.

    தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரமையங்கள், தனியார் மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. 

    மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகள்,      குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

    இப்படி மாவட்டம் முழுவதும் 777 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 40,890 குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளில், பொது சுகாதாரத் துறை பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 3,203 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் பஸ் நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும்,  குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.
    ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் 2 நாட்களில்  பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப் பானது உலக சுகாதார நிறுவ னத்தின் அங்கீகாரம் பெற் றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது.

    எனவே, பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந் தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள் நடக்கும் முகாமுக்கு குழந்தை களை அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×