என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உறிஞ்சி குழாய் அமைக்கும் பணியை கூடுதல் கலெக்டர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    உறிஞ்சி குழாய் அமைக்கும் பணியை கூடுதல் கலெக்டர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    திருவண்ணாமலை ஒன்றியத்தில் ரூ.2.10 கோடியில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

    திருவண்ணாமலை ஒன்றியத்தில் ரூ.2.10 கோடியில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கிக்கால், ஆடையூர், அடி அண்ணாமலை, மேலத்திகான் மற்றும் சோ.நாச்சிப்பட்டு ஆகிய கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றுவருகிறது.

    ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் எம்.பிரதாப் பார்வையிட்டு திட்ட ஆய்வினை மேற்கொண்டார்.

    ஆய்வின்போது ஆணையாளர் கே.சி. அமிர்தராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.எஸ்.லட்சுமி, உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரதாப், துறை அலுவலர்களுக்கும், ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்படி அறிவுறுத்தினார்.

    ஆய்வின் முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர் களுக்கும், அனைத்து கள அலுவலர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தி பொது மக்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களில் விரைந்து செயல்பட்டு பணிகளை முடிக்கவும், உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அறிவுரைகள் வழங்கினார்.
    Next Story
    ×