என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து பலி
கூவத்தூர் அருகே மரத்தில் கார் மோதல்- வங்கி ஊழியர் பலி
கூவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி வங்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 29). தனியார் வங்கியில் வாகன கடன் வழங்கும் பிரிவில் ஊழியராக பணி செய்து வந்தார்.
இவர் இரவு வங்கி வேலை சம்பந்தமாக நண்பர்களுடன் காரில் பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கூவத்தூர் அடுத்த சீக்கினாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாபு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






