என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாக்குதல்
கடலூரில் தேர்தல் முன்விரோதத்தில் முதியவர் மீது தாக்குதல்
கடலூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, யார்- யார்? வெற்றி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி (வயது 50) . அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவருக்கு ஏன் ஓட்டு போடவில்லை என்று கேட்டு, புண்ணிய மூர்த்தியை தாக்கினார்.
இதனை தடுக்க வந்த அவரது மனைவி ஜெயந்தியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் புண்ணிய மூர்த்தி காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாநகராட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, யார்- யார்? வெற்றி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி (வயது 50) . அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவருக்கு ஏன் ஓட்டு போடவில்லை என்று கேட்டு, புண்ணிய மூர்த்தியை தாக்கினார்.
இதனை தடுக்க வந்த அவரது மனைவி ஜெயந்தியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் புண்ணிய மூர்த்தி காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






