என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை பாக்கெட்டு
புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்-2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத புகையிலை பொருட்களை தடுக்க போலீ சார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருச்சுழி போலீசார் சம்பவத்தன்று ஜவாஸ்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் 2பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து நடத்திய கிடுக்கப்பிடி விசாரணையில் அவர்கள் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராமர்(44), பாண்டிய ராஜன்(38) என்பதும், ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 174புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது-
இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






