என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
கல்லூரி மாணவிகள் மாயம்
விருதுநகரில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமாகினர்.
விருதுநகர்
விருதுநகர் ஆயம்மாள்நகரை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் வீரலட்சுமி(19). இவர் விருதுநகரில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற வீரலட்சுமி கல்லூரிக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகள் கவுசிகமா(19). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்ற கவுசிகமா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பலனில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






