என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    நாரி சக்தி புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் நாரி சக்தி புரஸ்கார் விருது பெறுவதற்கான கருத்துரு வரவேற்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்: 

    பெரம்பலூர்  மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உலக மகளிர் தின விழாவின் போது நாரி சக்தி புரஸ்கார் விருது பெறுவதற்கான கருத்துரு வரவேற்கப்படுகிறது.

    நாரி சக்தி புரஸ்கார்  விருது காசோலை ரூ.2,00,000 - மற்றும் சான்றிதழ் வழங்கும் பொருட்டு, பெண்கள் பாலின விகிதத்தை உயர்த்த சேவை புரிந்த தனிநபர், குழுக்கள், தொண்டு நிறுவனம், நிறுவனங்களிடம் கருத்துரு இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.

    இவ்விருது பெற தனிநபர் எனில் 25 வயது பூத்தியடைந்தவராக இருக்க வேண்டும், நிறுவனங்கள் எனில் குறைந்தது 5 ஆண்டுகள்  சேவை புரிந்து இருக்க வேண்டும்.  

    மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரியில் 8838872443 மற்றும் 7502034646 என்ற கைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×