search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலத்தில் விஷம் குடித்த இளம்பெண் சாவு

    சேலத்தில் விஷம் குடித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


    சேலம்:

    சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மகள் மலர்விழி (வயது 24). இவர் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்தபோது விஷத்தை குடித்துவிட்டார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×