என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமி பலாத்காரம்
விருதுநகர் அருகே சிறுமி பலாத்காரம்
விருதுநகர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்ததாக தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருவிருந்தாள்பட்டியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவார்கள். இதன் காரணமாக அந்த சிறுமி வீட்டில் தனியாக இருப்பார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான கருப்பசாமி என்ற மனோஜ் (வயது 48), சிறுமியிடம் நைசாக பேசி பலமுறை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அப்பையநாயக்கன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.
Next Story






