என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஊத்தங்கரை பேரூராட்சியை 36 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க. கைப்பற்றியது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியை 36 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க. கைப்பற்றியது
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. மொத்த வாக்குகள் 16550 ஆகும். இதில் ஆண்கள் 7978. பெண்கள் 8586. மற்றவர்கள் 16. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேட்சைகள் என 87 பேர் போட்டியிட்டனர்.  11 ஆயிரத்து 567 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மையத்தில் எண்ணப்பட்டது. இதில் திமுக 12 வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும், பாமக ஒரு வார்டிலும், சுயேட்டை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். 

    அதன்படி, 15 வார்டுகளில் தி.மு.க 12 வார்டுகளில் வெற்றி பெற்று, 38 ஆண்டிற்கு பின்னர் (1986-1991) ஊத்தங் கரை பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற 9 பெண்களில் 8 பேர் தி.மு.க, ஒருவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.

    Next Story
    ×