search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.புதுப்பட்டிணம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஆர்.புதுப்பட்டிணம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    அறந்தாங்கி அருகே கோவில் மகா கும்பாபிஷேகம்

    அறந்தாங்கி அருகே சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆர்.புதுப்பட்டிணத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீகாமட்சியம்மன், ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட திருக்கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்றன.

    இதையடுத்து இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 17 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து  ஐந்து கால யாக பூஜை, ஆறாம்கால பூஜை நடைபெற்றது.

    கடம் புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனைத்தொடர்ந்து சிவஸ்ரீ பிச்சைகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் ஆர்.புதுப்பட்டிணம், முத்துக்குடா, மீமிசல், கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், பகுதியைச் சுற்றியுள்ள பொது மக்கள்  கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×