என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறந்த கால்நடைகளுக்கான சிறப்பு பரிசை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கிய போது எடுத்தப்படம்.
கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்
பொன்னமராவதி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு முகாமில் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சி செவலூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அதில் இலுப்பூர் கோட்ட உதவி இயக்குனர் பாண்டி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
சண்முகநாதன் பிரகானந்தன் கால்நடை ஆய்வாளர் தயானந்தராவ், முத்துக்குமார் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சோலை மணி, முருகன், சாந்தி ஆகியோர் முகாமில் பங்கேற்றனர்.
இதில் அப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து முகாமிற்க்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சினை ஊசி, சினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் செவலூர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா முத்துக்குமார், துணை தலைவர் சங்கர், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர்.
Next Story