என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வேட்பாளர் போலீசாருடன் வாக்குவாதம்
போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
கோவை:
பேரூர் பேரூராட்சி 13&வது வார்டில் தி.மு.க. சார்பில் செந்தில்குமாரும், அ.தி.மு.க சார்பில் மணியனும் போட்டியிட்டனர். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க.வேட்பாளர் செந்தில் குமார் 158 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட மணியன் 141 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என கூறி அ.தி.மு.க. வேட்பாளர் மணியன் மற்றும் அவரது மகள் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
Next Story