என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பேரறிவாளன்
    X
    பேரறிவாளன்

    பரோலில் வந்த பேரறிவாளனுக்கு 8-வது முறையாக மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பரோலில் வந்த பேரறிவாளனுக்கு 8-வது முறையாக மேலும் 30 நாள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள பழைய ஜோலார்பேட்டை கோவிந்தசாமி ரெட்டி தெருவில் வசிக்கும் குயில்தாசன் மகன் பேரறிவாளன் (வயது51). 

    இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சிறுநீரக நோய் தொற்று மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக அவருக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதல்வருக்கு மனு அளித்தார். அம்மனுவை பரிசீலித்த முதல்அமைச்சர் 30 நாட்கள் சாதாரண பரோல் வழங்கி உத்தரவிட்டார். 

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் 28-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 20 க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.   பின்னர் நாள் தோறும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் அதற்கான பதிவேட்டில் கையெழுத்து வாங்கி வருகின்றனர். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர், தருமபுரி, உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

    மேலும் அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்த நிலையில் இதுவரை 7 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

    இதனையடுத்து பேரறிவாளனுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி தர்மபுரி வேலூர் விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதால் பேரறிவாளனின் உடல் பாதிப்பை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாதம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்க வேண்டும் என இவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மனு அனுப்பியிருந்தார்.

     இந்நிலையில் தமிழக அரசு கடந்த மாதம் ஏற்கனவே பரோல் வழங்கிய 30 நாட்கள் நேற்றுடன் முடிந்து இன்று பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல இருந்த நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. 

    மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே 7 முறை பரோல் நீடித்திருந்த நிலையில் தற்போது 8-வது முறையாக தமிழக அரசு பரோல் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×